என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்: சிபிஎஸ்சி நிர்வாகம்
Byமாலை மலர்20 Nov 2020 1:39 PM GMT (Updated: 20 Nov 2020 1:39 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கபடாத நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் இந்தியா முழுவதும் 100 சதவீதம் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் பள்ளி திறக்கப்பட்டாலும், கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மாநிலங்கள் பள்ளிகளை திறக்கும் திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளது.
தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில், பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்ற கருத்தும் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி அமைப்பு நிர்வாகிகள் குழு செயலாளர் அனுராக் திரிபாதி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் தேர்வுக்கு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X