என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மால்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆனது
Byமாலை மலர்19 Nov 2020 7:57 PM GMT (Updated: 19 Nov 2020 7:57 PM GMT)
மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இயங்கி வரும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று முற்பகல் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து அங்கு தீ விபத்தும் ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்தவர்கள் மால்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மால்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மாநில கவர்னர் ஜகதீப் தங்கார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X