என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன
Byமாலை மலர்4 Nov 2020 5:31 PM GMT (Updated: 4 Nov 2020 5:31 PM GMT)
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியா வந்தடைந்தன.
புதுடெல்லி:
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நிறுவனம் முதல் தவணையாக ஐந்து விமானங்களை வழங்கியது. இந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. அந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதோடு, லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில் பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ரபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இன்று காலை புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் இன்று இரவு 8.14 மணிக்கு இந்தியா வந்தடைந்துள்ளது என அரசுத்தரப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X