என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரின் டயர் வெடித்து விபத்து - முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே உயிர் தப்பினார்
Byமாலை மலர்2 Nov 2020 11:51 PM GMT (Updated: 2 Nov 2020 11:51 PM GMT)
மகாராஷ்டிராவில் காரின் டயர் வெடித்த விபத்தில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் அமல்நேரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலைய கட்டிட திறப்புவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கலந்துகொண்டு போலீஸ் நிலைய கட்டிடத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரியும், பா.ஜ.க.வில் இருந்து விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தவருமான ஏக்நாத் கட்சேயும் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் அவர் தனது காரில் ஜல்காவ் நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அப்போது வழியில் அவரது காரின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது.
இருப்பினும் சுதாரித்துக்கொண்ட டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காரில் இருந்த ஏக்நாத் கட்சே உள்பட அனைவரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏக்நாத் கட்சேயின் கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X