என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பினராயி விஜயன் பதவி விலகக்கோரி போராட்டம்: போலீசார் தடியடி
Byமாலை மலர்30 Oct 2020 11:13 AM GMT (Updated: 30 Oct 2020 6:19 PM GMT)
முன்னாள் முதன்மை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தூதரகம் பெயரை பயன்படுத்தி கேரளாவிற்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் முக்கிய காரணம் எனத் தெரியவந்தது. மேலும், இந்தத் தங்கம் கடத்தல் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் எம் சிவசங்கரை கைது செய்தனர்.
இதனால் முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பா.ஜனதாவின் யுவா மோர்ச்சா தொண்டர்கள் கோழிக்கோட்டில் உள்ள கமிஷனர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் கம்பிகளை தாண்டிச் செல்ல முயன்றனர்.
ஆகவே போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை கலைத்தனர். மேலும், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X