search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    இலவச தரிசனத்தில் அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்

    திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்கு நேற்று முன்தினம் டோக்கன் பெற்ற பக்தர்கள், நேற்று அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு நேற்று முன்தினம் டோக்கன் பெற்ற பக்தர்கள், நேற்று காலை 8 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதியில் நேற்று 20,315 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7145 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.22 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
    Next Story
    ×