search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பீகாரை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள் -மோடி பிரச்சாரம்

    பீகார் மக்கள் மாநிலத்தில் காட்டு தர்பாரை கொண்டு வந்தவர்களை, பீகாரை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
    தர்பங்கா:

    பீகார் மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

    தர்பங்காவில் உள்ள ராஜ மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பீகார் மக்கள் மாநிலத்தில் காட்டு தர்பாரை கொண்டு வந்தவர்களை, பீகாரை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அவர்களின் ஆட்சியில் குற்றங்கள் பரவலாக இருந்ததாகவும்  கூறினார்.

    இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், வாக்காளர்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.  மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் மோடி குறிப்பிட்டார்.
    Next Story
    ×