search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கராத்தே மாஸ்டர் மற்றும் மாணவரின் கின்னஸ் சாதனை
    X
    கராத்தே மாஸ்டர் மற்றும் மாணவரின் கின்னஸ் சாதனை

    கொஞ்சம் அசந்தால் மரணம்... மாணவருடன் இணைந்து கின்னஸ் சாதனை படைத்த கராத்தே மாஸ்டர்

    தெலுங்கானாவைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் கண்ணைக் கட்டிக்கொண்டு தேங்காய் உடைப்பதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    ஐதராபாத்: 

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை ஆசிரியர் பிரபாகர் ரெட்டி பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில், பிரபாகர் ரெட்டியும் அவரது மாணவரான நெல்லூரைச் சேர்ந்த பாயில்லா ராகேஷ் என்பவரும் இணைந்து கடந்த மாதம் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

    ஒருவர் படுத்துக்கொள்ள அவரை சுற்றி தேங்காய்களை வரிசையாக வைத்து வைத்து மற்றொருவர் கண்களைக் கட்டிக்கொண்டு  சுத்தியலால் அந்த தேங்காய்களை அடித்து உடைக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஒரு நிமிடத்தில் 49 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 

    மாணவருடன் கராத்தே மாஸ்டர் பிரபாகர் ரெட்டி


    இந்த சாதனையை ஏற்படுத்துவதற்காக பிரபாகர் ரெட்டி 6 மாதம் கடுமையாக பயிற்சி செய்துள்ளார். ஒரு நிமிடத்தில் 35 தேங்காய்களை உடைக்க இலக்கு வைத்திருந்ததாகவும், ஆனால் 49 தேங்காய்களை உடைத்ததாகவும் தெரிவித்தார் பிரபாகர் ரெட்டி.
    Next Story
    ×