என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொஞ்சம் அசந்தால் மரணம்... மாணவருடன் இணைந்து கின்னஸ் சாதனை படைத்த கராத்தே மாஸ்டர்
Byமாலை மலர்14 Oct 2020 4:07 AM GMT (Updated: 14 Oct 2020 11:18 AM GMT)
தெலுங்கானாவைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் கண்ணைக் கட்டிக்கொண்டு தேங்காய் உடைப்பதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை ஆசிரியர் பிரபாகர் ரெட்டி பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில், பிரபாகர் ரெட்டியும் அவரது மாணவரான நெல்லூரைச் சேர்ந்த பாயில்லா ராகேஷ் என்பவரும் இணைந்து கடந்த மாதம் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
ஒருவர் படுத்துக்கொள்ள அவரை சுற்றி தேங்காய்களை வரிசையாக வைத்து வைத்து மற்றொருவர் கண்களைக் கட்டிக்கொண்டு சுத்தியலால் அந்த தேங்காய்களை அடித்து உடைக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஒரு நிமிடத்தில் 49 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனையை ஏற்படுத்துவதற்காக பிரபாகர் ரெட்டி 6 மாதம் கடுமையாக பயிற்சி செய்துள்ளார். ஒரு நிமிடத்தில் 35 தேங்காய்களை உடைக்க இலக்கு வைத்திருந்ததாகவும், ஆனால் 49 தேங்காய்களை உடைத்ததாகவும் தெரிவித்தார் பிரபாகர் ரெட்டி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X