search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    வேளாண் சட்டங்களை கண்டித்து ராகுல்காந்தி டிராக்டர் பேரணி

    புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.
    அமிர்தசரஸ்:

    மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.

    இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த பேரணி நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ராகுல்காந்தியின் டிராக்டர் பேரணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×