search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

    பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார்.
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அவர் அறிவிக்க உள்ளார். இத்தகவலை தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் பாஜகவும் இணைந்துள்ளது. வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது.

    நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
    Next Story
    ×