search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    தமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே- ப.சிதம்பரம்

    தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே என் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று இந்தி தினம் என்று இந்தி மொழி பேசும் மக்கள் பெருமைப்படுகிறார்கள். அவரவர் மொழியை அவரவர் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

    தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே

    கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெரும் தொல்லியல் அகழாய்வுகள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்குப் பெருமையளிக்கிறது.’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×