என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் தப்பி ஓடிய கைதி சிக்கினார்- தப்ப விட்ட 2 போலீஸ்காரர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்14 Sep 2020 9:55 AM GMT (Updated: 14 Sep 2020 9:55 AM GMT)
உத்தர பிரதேசத்தில் பணியில் அலட்சியமாக இருந்து கைதியை தப்ப விட்ட விவகாரம் தொடர்பாக, 2 போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கேரி:
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம், மிதவ்லி பகுதியில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் ஹிராலால் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று அவரை காவலில் வைத்து விசாரிப்பதற்காக 2 போலீஸ்காரர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது குற்றவாளி தப்பி ஓடிவிட்டார்.
பெட்ரோல் பங்கில் இருந்து குற்றவாளி தப்பி ஓடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தப்பி ஓடிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த கைதி இன்று போலீசில் சிக்கி உள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்து கைதியை தப்ப விட்ட போலீஸ்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உதவி கமிஷனர் தெரிவித்திருந்தார். அதன்படி குற்றவாளியை அழைத்துச் சென்ற போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X