search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஹரிவன்ஷ்
    X
    ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஹரிவன்ஷ்

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் -பாஜக கூட்டணியின் ஹரிவன்ஷ் மனு தாக்கல்

    மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம்தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தகூட்டத் தொடரின் முதல் நாளில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. துணைத்தலைவர் ஹரிவன்ஷின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான வேட்பு மனு தாக்கல் 7ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 11ம் தேதி கடைசி நாள் ஆகும். 

    மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஹரிவன்ஷ், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    மாநிலங்களவை துணைத் தலைவரை போட்டியின்றி தேர்ந்து எடுப்பதற்கு என்டிஏ கூட்டணி முயற்சி மேற்கொண்டது. மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இதுபற்றி பேசியது. எனவே, ஹரிவன்ஷ் மீண்டும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×