என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாய் பராமரிப்பு வேலைக்கு பட்டதாரிகளை அழைத்த ஐ.ஐ.டி.
Byமாலை மலர்7 Sep 2020 8:04 PM GMT (Updated: 7 Sep 2020 8:04 PM GMT)
பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கூறி இருந்தது.
புதுடெல்லி:
புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதுடன், வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை நாய் பராமரிக்க அழைப்பதாக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததால் ஐ.ஐ.டி. நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்ததுடன், அந்த விளம்பர அறிவிப்பை திரும்ப பெறுவதாக கூறி இருக்கிறது.
‘‘நாய் பராமரிப்பாளர் பணியானது, இளநிலை கால்நடை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கானது. ஆனால் வெளியான அறிவிப்பில், வேறு ஒரு பணி அறிவிப்புக்கான இளநிலை பட்டப்படிப்பு தகுதிகள் தவறுதலாக நகல் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுவிட்டது. ஐ.ஐ.டி. வளாகத்திற்கு கொண்டுவரப்படும் தெருநாய்களை பராமரித்தல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ‘நாய் பராமரிப்பாளர்’ பணியிடங்கள் நிரப்பப்படும். தவறான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு, இதற்காக வேறு புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
‘‘நாய் பராமரிப்பாளர் பணியானது, இளநிலை கால்நடை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கானது. ஆனால் வெளியான அறிவிப்பில், வேறு ஒரு பணி அறிவிப்புக்கான இளநிலை பட்டப்படிப்பு தகுதிகள் தவறுதலாக நகல் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுவிட்டது. ஐ.ஐ.டி. வளாகத்திற்கு கொண்டுவரப்படும் தெருநாய்களை பராமரித்தல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ‘நாய் பராமரிப்பாளர்’ பணியிடங்கள் நிரப்பப்படும். தவறான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு, இதற்காக வேறு புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X