என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன - நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்27 Aug 2020 12:53 PM GMT (Updated: 27 Aug 2020 12:53 PM GMT)
மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கி உள்ளதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனால், ஜிஎஸ்டி வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை. உடனே மத்திய அரசு ஜிஎஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் மாநில நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் 5 மணி நேரம் நீடித்தது.
அதன்பின் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம். மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும், காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பாண்டு ஜி.எஸ்.டி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டப்படி மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 2019-20 நிதி ஆண்டில் 1.65 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X