search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பிரேன் சிங்
    X
    முதல் மந்திரி பிரேன் சிங்

    மணிப்பூரில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    மணிப்பூரில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
    உக்ரூல்:

    கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.

    இதற்கிடையே, மணிப்பூரில் 4,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 2,438 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 1,939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
     
    இந்நிலையில், மணிப்பூரில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அம்மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், முதல் மந்திரி பிரேன் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆகஸ்டு 31-ம் தேதி மணிப்பூரில் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
    Next Story
    ×