search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி
    X
    என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி

    காஷ்மீர் என்கவுண்டர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் புல்வாமாவில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல்வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

    இதையடுத்து, உடனடியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி அசாத் லஹாரி என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×