என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வங்கி கணக்கை வெளியிட சுவிஸ் அரசு நடவடிக்கை
Byமாலை மலர்10 July 2020 7:37 AM GMT (Updated: 10 July 2020 7:37 AM GMT)
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தற்போது அரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் குல்தீப் பிஷ்னோயின் வங்கி கணக்கை வெளியிட சுவிஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய். தற்போது, அரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த ஆண்டு, இவரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பினாமி சொத்தாக கருதப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் முடக்கப்பட்டது.
குல்தீப் பிஷ்னோய்க்கும், அவருடைய மனைவி ரேணுகாவுக்கும் வெளிநாடுகளில் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறை கண்டுபிடித்தது. அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இதையடுத்து, இருவரின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்கும் நடவடிக்கையின் முதல்கட்டமாக, அந்த தகவல்களை அளிப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிஷ்னோய்க்கும், ரேணுகாவுக்கும் சுவிஸ் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X