search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் பிஷ்னோய்
    X
    குல்தீப் பிஷ்னோய்

    அரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வங்கி கணக்கை வெளியிட சுவிஸ் அரசு நடவடிக்கை

    அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தற்போது அரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் குல்தீப் பிஷ்னோயின் வங்கி கணக்கை வெளியிட சுவிஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய். தற்போது, அரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த ஆண்டு, இவரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பினாமி சொத்தாக கருதப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் முடக்கப்பட்டது. 

    குல்தீப் பிஷ்னோய்க்கும், அவருடைய மனைவி ரேணுகாவுக்கும் வெளிநாடுகளில் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறை கண்டுபிடித்தது. அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இதையடுத்து, இருவரின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்கும் நடவடிக்கையின் முதல்கட்டமாக, அந்த தகவல்களை அளிப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிஷ்னோய்க்கும், ரேணுகாவுக்கும் சுவிஸ் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    Next Story
    ×