என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் குல்காம் என்கவுண்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
Byமாலை மலர்4 July 2020 7:32 PM GMT (Updated: 4 July 2020 7:32 PM GMT)
காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹுஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையின் போது முதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
மற்றொரு பயங்கரவாதி தொடர்ந்து மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வந்தார். நீண்ட நேர மோதலுக்கு பின்னர் நள்ளிரவில் இரண்டாவது பயங்கரவாதியையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட இருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் எனவும், அதில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவன் எனவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் 3 பேர் காயமடைந்ததாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X