search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே மோதல்

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபுரா நகரின் டிரெல் பகுதியின் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
    மோதல் நடைபெறும் பகுதியில் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.  

    இதற்கிடையில், பிஜீப்ஹூரா பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பங் சிங் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×