என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவர்கள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது மேற்கு வங்காளம்
Byமாலை மலர்29 Jun 2020 12:42 PM GMT (Updated: 29 Jun 2020 12:47 PM GMT)
மருத்துவர்கள் தினமான ஜூலை 1-ம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், உலக மருத்துவர்கள் தினம் நாளை (ஜூலை 1) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து மேற்குவங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில்,
’கொரோனா வைரசில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர முன்கள வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூலை 1 ஆம் தேதியை மாநில அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம்.
முன்கள வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மருத்துவர்கள் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X