search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

    அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
    திக்லிபூர்:

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், அந்தமான் நிகோபர் தீவும் இதில் இருந்து தப்பவில்லை.  இதனால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.  இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

    Next Story
    ×