என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.-யில் கோயிலுக்குள் மகனுடன் இறந்து கிடந்த பூசாரி: காவல்துறை விசாரணை
Byமாலை மலர்29 May 2020 12:03 PM GMT (Updated: 29 May 2020 12:03 PM GMT)
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்திற்குள் பூசாரி ஒருவரும், அவரது மகனும் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று கோயில் ஒன்றின் உள்ளே இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பூசாரி மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் புலந்ஜர் மாவட்டத்தில் ஜெகதீஷ் என்ற சாமியாரும், அவரது சீடரான ஷேர் ஷிங் என்பவரும் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்தனர். அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், முராரி அலியாஸ் ராஜூ என்பவரைக் கைது செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், தான் திருடியது தொடர்பாகச் சாமியாரும், அவரது சீடரும் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவர்களைப் போதையில் அடித்துக்கொன்றதாகவும் முராரி வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் புலந்ஜர் மாவட்டத்தில் ஜெகதீஷ் என்ற சாமியாரும், அவரது சீடரான ஷேர் ஷிங் என்பவரும் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்தனர். அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், முராரி அலியாஸ் ராஜூ என்பவரைக் கைது செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், தான் திருடியது தொடர்பாகச் சாமியாரும், அவரது சீடரும் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவர்களைப் போதையில் அடித்துக்கொன்றதாகவும் முராரி வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X