search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த நாயின் உடலை சாப்பிடும் மனிதன்
    X
    இறந்த நாயின் உடலை சாப்பிடும் மனிதன்

    பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம்

    பசிக்கொடுமையால் இறந்து கிடந்த நாயின் உடலை ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்போது, சாஹபுரா பகுதியில் சாலையில் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காண்கிறார். அவரருகே சென்ற பிரதுமன் சிங் நருகா, “உங்களுக்கு சாப்பிட உணவு இல்லையா? நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என அந்த மனிதரைக் கூச்சலிட்டு, சாலையின் ஓரத்தில் காத்திருக்கச் சொல்கிறார். அதன்பின் அவரை அணுகிய நருகா, அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குகிறார்.

    இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து முகநூலில் நருகா வெளியிட்டுள்ள செய்தியில், பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை சாலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. உடனடியாக நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள். இந்த வீடியோவை உங்களால் முடிந்தவரை அரசுக்குச் சென்றடையும் வரை பகிர்ந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×