என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூப்பர் புயலாக மாறுகிறது அம்பன்- 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்18 May 2020 8:01 AM GMT (Updated: 18 May 2020 8:01 AM GMT)
அம்பன் புயல் அதிதீவிரமடைந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. ‘அம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது. காலையில் சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.
புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் சூப்பர் புயலாக மாறும் என்றும், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அம்பன் புயல் காரணமாக புயலால் ஒடிசா, மேற்குவங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசாவின் வடக்கு பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்பதால் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நிலையை சமாளிக்க பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சூப்பர் புயலாக மாறும் அம்பன் புயல், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே மே 20ம் தேதி மதியம் அல்லது மாலையில் கடந்து செல்லும். இதன் காரணமாக மே 19 முதல் கடலோர ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை மழை பெய்யும். மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வடக்கு வங்காள விரிகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X