என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றிய வாலிபருக்கு கோர்ட் நூதன தண்டனை
Byமாலை மலர்18 April 2020 3:20 AM GMT (Updated: 18 April 2020 3:20 AM GMT)
கொல்கத்தாவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றிய வாலிபருக்கு கோர்ட்டு நூதன தண்டனை வழங்கி உள்ளது.
கொல்கத்தா:
கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், கடந்த 11-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கொல்கத்தாவை வலம் வந்தார். சாரு மார்க்கெட் பகுதியில், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, வீட்டில் இருந்து 7 கி.மீ. தூரம் வெளியே வந்ததற்கு அவரால் திருப்திகரமான விளக்கம் அளிக்க முடியவில்லை. அவரிடம் வாகனத்துக்கான ஆவணங்களும் இல்லை. அத்துடன், தடுத்து நிறுத்திய போலீசாரை சரமாரியாக திட்டினார். தப்பி ஓட முயன்றார்.அதனால், அரசு உத்தரவுக்கு கீழ்ப்படியாதது, பொது ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.
அலிப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட்டு, கொரோனாவுக்கு எதிராக தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யுமாறு நூதன தண்டனை விதித்தார்.
அதன்படி, கொல்கத்தாவில், போலீசார் குறிப்பிடும் பகுதியில், அந்த வாலிபர் தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை பிரசாரம் செய்கிறார்அதாவது, கோர்ட்டு நிர்ணயித்த நேரத்துக்கு மேல் அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், கடந்த 11-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கொல்கத்தாவை வலம் வந்தார். சாரு மார்க்கெட் பகுதியில், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, வீட்டில் இருந்து 7 கி.மீ. தூரம் வெளியே வந்ததற்கு அவரால் திருப்திகரமான விளக்கம் அளிக்க முடியவில்லை. அவரிடம் வாகனத்துக்கான ஆவணங்களும் இல்லை. அத்துடன், தடுத்து நிறுத்திய போலீசாரை சரமாரியாக திட்டினார். தப்பி ஓட முயன்றார்.அதனால், அரசு உத்தரவுக்கு கீழ்ப்படியாதது, பொது ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.
அலிப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட்டு, கொரோனாவுக்கு எதிராக தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யுமாறு நூதன தண்டனை விதித்தார்.
அதன்படி, கொல்கத்தாவில், போலீசார் குறிப்பிடும் பகுதியில், அந்த வாலிபர் தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை பிரசாரம் செய்கிறார்அதாவது, கோர்ட்டு நிர்ணயித்த நேரத்துக்கு மேல் அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X