என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கையை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
Byமாலை மலர்21 Feb 2020 5:31 AM GMT (Updated: 21 Feb 2020 5:31 AM GMT)
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடனம் ஆடிய தங்கையை மணமகன் அடித்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. மணமகன் ஒரு ராணுவ வீரர்.
திருமணத்துக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தடல் புடலாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள்.
மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடினார். இதை கண்ட மணமகனுக்கு சகோதரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்தார்.
இதை பார்த்த மணமகள் மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்தார். இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார். ‘இப்படி ஒரு முன் கோபக்காரருடன் என்னால் வாழ முடியாது. இப்போது அவர் சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை திருமணத்துக்கு பின் என்னையும் இப்படித்தான் அடிப்பார்.
பெண்களை மதிக்க தெரியாத இதுபோன்ற நபர்களுடன் என்னால் வாழ முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.
மணமகன் குடிபோதையில் இருந்ததாகவும் அதனால் தான் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிய வந்தது. உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் அதை ஏற்கவில்லை. வீட்டுக்கு திரும்பி விட்டார். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. மணமகன் ஒரு ராணுவ வீரர்.
திருமணத்துக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தடல் புடலாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள்.
மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடினார். இதை கண்ட மணமகனுக்கு சகோதரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்தார்.
இதை பார்த்த மணமகள் மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்தார். இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார். ‘இப்படி ஒரு முன் கோபக்காரருடன் என்னால் வாழ முடியாது. இப்போது அவர் சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை திருமணத்துக்கு பின் என்னையும் இப்படித்தான் அடிப்பார்.
பெண்களை மதிக்க தெரியாத இதுபோன்ற நபர்களுடன் என்னால் வாழ முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.
மணமகன் குடிபோதையில் இருந்ததாகவும் அதனால் தான் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிய வந்தது. உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் அதை ஏற்கவில்லை. வீட்டுக்கு திரும்பி விட்டார். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X