என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
Byமாலை மலர்20 Feb 2020 12:04 PM GMT (Updated: 20 Feb 2020 12:04 PM GMT)
ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்து விட்டேன் என்ற திருடன், அந்த வீட்டு சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதியது கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் திருவாங்குளம் பகுதியில் பல கடைகளில் திருடிய திருடன் ஒருவன் அங்குள்ள ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் திருட பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான்.
உள்ளே சென்றதும் அங்குள்ள புகைப்படங்களை பார்த்தான். அதை வைத்து அந்த வீடு ராணுவ வீரருடையது என தெரிந்து கொண்டான்.
இதையடுத்து அங்கு திருடாமல் சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.
அதில், 'இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே, என்னை மன்னித்து விடுங்கள்' என குறிப்பிட்டுள்ளான்.
தகவலறிந்து கேரள போலீசார் அந்த திருடனைப் பிடிக்க விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X