search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டப்பட்ட தலையுடன் சாலையில் செல்லும் அகிலேஷ்
    X
    வெட்டப்பட்ட தலையுடன் சாலையில் செல்லும் அகிலேஷ்

    உ.பி. - மனைவியின் தலையுடன் 1.5 கி.மீ தூரம் சென்றவர் கைது

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் குடும்பத்தகராறில் இன்று மனைவியின் தலையை வெட்டி எடுத்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் ராவத்(30). இவருக்கு ரஜனி(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டது.

    இந்நிலையில், தம்பதியர் இன்று வீட்டில் இருந்தபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அகிலேஷ் தனது மனைவியை கடுமையாக தாக்கி அவரை தரதரவென இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளினார். பின்னர், கூர்மையான ஆயுதத்தை கொண்டு ரஜனியை சரமாரியாக தாக்கினார். 

    கைது செய்யப்பட்ட அகிலேஷ்

    இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் ரஜனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்த பின்னரும் ஆவேசம் தணியாத அகிலேஷ், ரஜனியின் தலையை உடலில் இருந்து துண்டாக வெட்டி எடுத்தார். பட்டப்பகலில் அந்த தலையுடன் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றார். 

    இது குறித்து தகவலறிந்த போலீசார் வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் காவல் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த அகிலேஷ் ராவத்தை வழியில் இடைமறித்து கைது செய்தனர். இச்சம்பவம் பரபங்கி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×