என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரக்கு பாட்டில்களை லஞ்சமாக வாங்கிய போலீஸ் அதிகாரிகள்
Byமாலை மலர்10 Jan 2020 6:53 AM GMT
தெலுங்கானாவில் இரண்டு மதுபான பாட்டில்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயையும் லஞ்சமாக வாங்கிய இரு போலீஸ் அதிகாரிகளை ஊழல் தடுப்பு முகமை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
ஐதராபாத்:
ஐதராபாத் நகரில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து இரு நாட்களுக்கு பிறகு (டிசம்பர் 31) அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அவர் வெளிவந்த பிறகும், ஜாமீனில் விடுவித்ததற்காகவும் அவர்மீதான மோசடி வழக்கை ரத்து செய்வதற்கும் ஜூபிளி ஹில்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் 1 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் வேண்டுகோளின் படி லஞ்ச தொகையை 50 ஆயிரமாக குறைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த நபர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஆய்வாளரின் அறிவுறுத்தலின் பேரில் புகார்தாரரிடமிருந்து மது பாட்டில்களுடன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை ஆய்வாளரை ஊழல் தடுப்பு முகமை அதிகாரிகள் நேற்று கையும் களவுமாக பிடித்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X