search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    குடியுரிமை சட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

    குடியுரிமை சட்டத்தை உடனே அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை உடனே அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பரிசத் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    குடியுரிமை சட்டத்தை உடனே அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×