search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி
    X
    உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி

    நிர்பயா தாயாரிடம் மகனுக்காக மடி பிச்சை கேட்ட குற்றவாளியின் தாய்

    நிர்பயா தாயாரிடம் மகனுக்காக குற்றவாளியின் தாய் மடி பிச்சை கேட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.  இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

    சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 4 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.

    இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. 

    இதனைத் தொடர்ந்து 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் ஜெயிலில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது.
    நிர்பயா கொலை குற்றவாளிகள்.
    இந்நிலையில், தீர்ப்பிற்கு முன், உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளுள் ஒருவரான, முகேஷ் சிங்கின் தாயார் என் மகனை எனக்கு திருப்பி அளியுங்கள் என்றும், மகனுக்கு உயிர்பிச்சை போடும் படி நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்டுள்ளார். ஆனால் இதனை மறுத்த ஆஷா தேவி, மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு  நீதிக்காக தாம் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருப்பாதாக கூறினார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 22-ந்தேதி காலை 7 மணிக்கு டெல்லி திகார் சிறையில், தூக்கிலப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×