என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருண் ஜெட்லி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட பீகார் மந்திரி சபை முடிவு
Byமாலை மலர்31 Dec 2019 3:47 PM GMT (Updated: 31 Dec 2019 3:47 PM GMT)
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட பீகார் மாநில மந்திரி சபை முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பாட்னா:
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு பேரிழப்பாய் அமைந்தது.
இதற்கிடையே, முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, டிசம்பர் 28ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி சிலையை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைத்தார்.
இந்நிலையில், பீகார் மாநில மந்திரி சபை கூட்டம் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பீகாரில் அருண் ஜெட்லியின் பிறந்த நாளான டிசம்பர் 28-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட அம்மாநில மந்திரி சபை முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X