என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்
Byமாலை மலர்25 Dec 2019 7:19 AM GMT (Updated: 25 Dec 2019 7:19 AM GMT)
மத்தியபிரதேச மாநிலத்தில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்கள் அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள ஜமோடி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சம்பவத்தன்று மாணவி தனது தோழிகளுடன் மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். தோழிகள் வீட்டுக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென மாணவியை தூக்கி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். அதை ஒரு வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
நடந்த சம்பவத்தை போலீசில் புகார் செய்தால் கற்பழிப்பு வீடியோவை வெளியே பரப்பி விடுவதாக கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள்.
பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த 4 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் 4 பேருமே 16 மற்றும் 17 வயது உடையவர்கள. கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள ஜமோடி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சம்பவத்தன்று மாணவி தனது தோழிகளுடன் மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். தோழிகள் வீட்டுக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென மாணவியை தூக்கி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். அதை ஒரு வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
நடந்த சம்பவத்தை போலீசில் புகார் செய்தால் கற்பழிப்பு வீடியோவை வெளியே பரப்பி விடுவதாக கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள்.
பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த 4 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் 4 பேருமே 16 மற்றும் 17 வயது உடையவர்கள. கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X