என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்குள்ளான உகாண்டா நாட்டுப் பெண்
Byமாலை மலர்24 Dec 2019 12:53 PM GMT (Updated: 24 Dec 2019 12:53 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உகாண்டா நாட்டுப் பெண்ணை நள்ளிரவில் கற்பழித்து தப்பிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை:
உகாண்டா நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் கோரேகான் பூங்கா அருகேயுள்ள ஒரு ஓட்டலின் வாசலில் நின்றிருந்தார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டுசென்று விடுவதாக கூறினார். இதை நம்பி அவருடன் உகாண்டாப் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
வழியில் இன்னொரு நண்பரையும் அந்நபர் தனது வாகனத்தில் ஏற்றினார். மூன்று பேராக சென்றபோது தனது இருப்பிடத்துக்கு செல்ல வேண்டிய வழியை அந்தப் பெண் கைபேசியில் ஆராய்ந்தபோது அவர்கள் வேறு வழியில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
வாகனத்தை நிறுத்தி தன்னை இறக்கி விடுமாறு அந்தப்பெண் கூச்சலிட்டபோது ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து உகாண்டாப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்தனர்.
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது தன்னை வாகனப் போக்குவரத்து உள்ள சாலையில் இறக்கி விடுமாறு அந்தப் பெண் கெஞ்சினார். அவர்களும் சம்மதிக்க, மூன்று பேரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் பயணத்தை தொடர்ந்தனர். அப்போது சாலையில் சில இளைஞர்கள் கும்பலாக வருவதை கண்ட அந்தப்பெண் உதவிக்காக கூச்சலிட்டார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் அந்த கும்பலை கண்ட பதற்றத்தில் நிலைதடுமாற மூன்று பேரும் கீழே விழுந்தனர். சுதாரித்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் வாகனத்தில் ஏறி ஓட்டம்பிடிக்க எதிரே வந்த இளைஞர்களின் உதவியுடன் மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் இன்று அதிகாலை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விமன் நகர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண் காத்திருந்த ஓட்டல் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
உகாண்டா நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் கோரேகான் பூங்கா அருகேயுள்ள ஒரு ஓட்டலின் வாசலில் நின்றிருந்தார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டுசென்று விடுவதாக கூறினார். இதை நம்பி அவருடன் உகாண்டாப் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
வழியில் இன்னொரு நண்பரையும் அந்நபர் தனது வாகனத்தில் ஏற்றினார். மூன்று பேராக சென்றபோது தனது இருப்பிடத்துக்கு செல்ல வேண்டிய வழியை அந்தப் பெண் கைபேசியில் ஆராய்ந்தபோது அவர்கள் வேறு வழியில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
வாகனத்தை நிறுத்தி தன்னை இறக்கி விடுமாறு அந்தப்பெண் கூச்சலிட்டபோது ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து உகாண்டாப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்தனர்.
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது தன்னை வாகனப் போக்குவரத்து உள்ள சாலையில் இறக்கி விடுமாறு அந்தப் பெண் கெஞ்சினார். அவர்களும் சம்மதிக்க, மூன்று பேரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் பயணத்தை தொடர்ந்தனர். அப்போது சாலையில் சில இளைஞர்கள் கும்பலாக வருவதை கண்ட அந்தப்பெண் உதவிக்காக கூச்சலிட்டார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் அந்த கும்பலை கண்ட பதற்றத்தில் நிலைதடுமாற மூன்று பேரும் கீழே விழுந்தனர். சுதாரித்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் வாகனத்தில் ஏறி ஓட்டம்பிடிக்க எதிரே வந்த இளைஞர்களின் உதவியுடன் மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் இன்று அதிகாலை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விமன் நகர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண் காத்திருந்த ஓட்டல் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X