என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக சட்டசபைக்கு 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு
Byமாலை மலர்24 Dec 2019 5:42 AM GMT (Updated: 24 Dec 2019 5:42 AM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக 10 பெண் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி, அமோக வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக 10 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக தலா 3 பெண் எம்எல்ஏக்களை பெற்றுள்ளன. இந்த 10 பெண் எம்எல்ஏக்களில் 6 பேர் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்.
2014ல் 9 பெண்களும், 2009ல் 8 பெண்களும், 2005ல் 5 பெண்களும் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றனர்.
இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 127 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X