search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவல்
    X
    அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவல்

    அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது- முதல் மந்திரி உறுதி

    அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவல் உறுதி அளித்தார்.
    கவுகாத்தி:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    அசாமில் நடந்த போராட்டம்

    அசாமில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை, தடியடி நடத்தி போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் செல்போன் இன்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. 

    அசாமில் தற்போது போராட்டங்கள் சற்று ஓய்ந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு செல்போன் இன்டர்நெட் சேவைகள் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி உள்ளன. பிராட்பேண்ட் சேவை ஏற்கனவே தொடங்கிவிட்டது. 

    இந்நிலையில் அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவல் கூறியதாவது:-

    அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நமது மொழிக்கோ நமது அடையாளத்திற்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. எந்த வகையிலும் அசாமின் கவுரவம் பாதிக்கப்படாது. 

    மக்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. மக்கள் ஆதரவுடன், அமைதியான வழியில் முன்னேற்றப் பாதையில் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×