என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்
Byமாலை மலர்7 Dec 2019 4:05 PM GMT (Updated: 7 Dec 2019 4:05 PM GMT)
கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தண்ணீர் கேட்கும் பாவணையில் உள்ளே நுழைந்த வாலிபர் அவரை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம். கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அருண் சுரேஷ்(25) என்ற வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான்.
அந்த சிறுமி தண்ணீரை எடுக்க சமையறைக்கு சென்றபோது பின்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.
இதையடுத்து, சிறுமி தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த கொடூரத்தை விவரித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், கோட்டயத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி அருண் சுரேஷை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், சிறுமியை கற்பழித்த குற்றவாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X