search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்
    X
    மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்

    கடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - பாராளுமன்றத்தில் தகவல்

    கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம்வரை 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம்வரை 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

    இவர்களில், 96 பேர் குரூப் ஏ அதிகாரிகள், 126 பேர் குரூப் பி அதிகாரிகள் ஆவர்.

    நேர்மையற்ற, திறமையற்ற ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப அடிப்படை விதிகள் 56(ஜே) பிரிவு அதிகாரம் அளிக்கிறது. அந்த விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார்.

    கடந்த 4 ஆண்டுகளில் எம்.பி.க்கள் பங்களாக்களை புனரமைத்தது, பழுது பார்த்தது போன்ற பணிகளால் ரூ.193 கோடி செலவானதாக மக்களவையில் மத்திய வீட்டு வசதித்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.

    எம்.பி.க்கள் வீட்டு பழுது பார்ப்பு செலவுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

    Next Story
    ×