search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பு
    X
    பாம்பு

    பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

    தாயை பாம்பு கடித்ததால் சிகிச்சை அளிக்க 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கை தயார் செய்து அதில் தாயை படுக்கவைத்து மகன்களும் உறவினர்களும் தூக்கிச் சென்ற சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
    புனே:

    மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் சந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரை பாம்பு கடித்துவிட்டது. உடனே அவருடைய 2 மகன்களும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    ஊரிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். சீரான சாலை வசதியோ, வாகன வசதியோ கிடையாது. இதனால் மூங்கில் படுக்கை தயார் செய்து அதில் தாயை படுக்கவைத்து 2 மகன்களும் உறவினர்களும் தூக்கிச் சென்றனர். பான்செட் என்ற அணைப்பகுதியை அடைந்ததும் ஒரு ‘ஜீப்’ கார் மூலம் அருகிலுள்ள கானாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புனேயில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    Next Story
    ×