என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ந்து 11-வது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் தேர்வு
Byமாலை மலர்3 Dec 2019 9:43 AM GMT (Updated: 3 Dec 2019 9:47 AM GMT)
பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 11-வது முறையாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பீகாரில் முக்கிய கட்சியாக திகழும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட, தற்போதைய தலைவராக உள்ள முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தலைவர் பதவிக்கு லாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக உள்கட்சி தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து 11-வது முறையாக லல்லு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1997-ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டபோது லாலு பிரசாத் யாதவ் தலைவராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X