என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனநாயக் ஜனதா கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்
Byமாலை மலர்29 Nov 2019 4:48 PM GMT (Updated: 29 Nov 2019 4:48 PM GMT)
அரியானா மாநில தேர்தலில் போட்டியிட்டு 10 தொகுதிகளை கைப்பற்றிய ஜனநாயக் ஜனதா கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சண்டிகர்:
அரியானாவில் செயல்பட்டு வந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சியில், சவுதாலா குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு அக்கட்சி உடைந்தது.
அஜய் சிங் சவுதாலாவும், துஷ்யந்த் சவுதாலாவும் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜனநாயக் ஜனதா கட்சியை தொடங்கினர். இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையில், அரியானாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாவி சின்னம் சார்பில் போட்டியிட்ட ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு இன்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. இக்கட்சியின் சின்னமாக சாவி சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X