என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்காளத்தில் மாடு திருடியதாக 2 பேர் அடித்து கொலை
Byமாலை மலர்22 Nov 2019 4:44 AM GMT (Updated: 22 Nov 2019 4:44 AM GMT)
மேற்குவங்காளத்தில் மாடு திருடியதாக கருதி 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் தின்ஹாட்டாவில் உள்ள ஒக்ராபரி பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ், ரபியுல்.
இருவரும் நேற்று ஒரு லோடு வேனில் 2 பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு கூச்பெகர் நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிராம மக்களுக்கு பசு மாடுகளை கடத்தி செல்வதாக தகவல் பரவி உள்ளது. அங்கு திரண்ட கிராம மக்கள் பிரகாஷ், ரபியுல் சென்ற வேனை தடுத்து நிறுத்தினர்.
அந்த வேனில் எந்த பதிவு எண்ணும் இல்லை. பசு மாடுகளை எங்கிருந்து வாங்கி செல்கிறீர்கள்? எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டனர்.
அதற்கு இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் பசு மாட்டை திருடி செல்வதாக கருதிய கிராம மக்கள் இருவரையும் வேனில் இருந்து கீழே தள்ளி வேனுக்கு தீ வைத்து எரித்தனர்.
பின்னர் பிரகாஷ், ரபியுலை மூங்கில் கம்புகள், லத்தி மற்றும் இரும்புக் கம்பிகளால், சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே இறந்தனர்.
இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் இங்குள்ள டோர்ஸ் பகுதியில் இதேபோல கும்பல் கொலை சம்பவம் நடந்தது.
மேலும் சில கும்பல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடைபெற்ற கும்பல் தாக்குதலும், அதில் 2 பேர் கொலை செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் தின்ஹாட்டாவில் உள்ள ஒக்ராபரி பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ், ரபியுல்.
இருவரும் நேற்று ஒரு லோடு வேனில் 2 பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு கூச்பெகர் நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிராம மக்களுக்கு பசு மாடுகளை கடத்தி செல்வதாக தகவல் பரவி உள்ளது. அங்கு திரண்ட கிராம மக்கள் பிரகாஷ், ரபியுல் சென்ற வேனை தடுத்து நிறுத்தினர்.
அந்த வேனில் எந்த பதிவு எண்ணும் இல்லை. பசு மாடுகளை எங்கிருந்து வாங்கி செல்கிறீர்கள்? எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டனர்.
அதற்கு இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் பசு மாட்டை திருடி செல்வதாக கருதிய கிராம மக்கள் இருவரையும் வேனில் இருந்து கீழே தள்ளி வேனுக்கு தீ வைத்து எரித்தனர்.
பின்னர் பிரகாஷ், ரபியுலை மூங்கில் கம்புகள், லத்தி மற்றும் இரும்புக் கம்பிகளால், சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே இறந்தனர்.
இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் இங்குள்ள டோர்ஸ் பகுதியில் இதேபோல கும்பல் கொலை சம்பவம் நடந்தது.
மேலும் சில கும்பல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடைபெற்ற கும்பல் தாக்குதலும், அதில் 2 பேர் கொலை செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X