என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Byமாலை மலர்6 Nov 2019 5:01 PM GMT (Updated: 6 Nov 2019 5:01 PM GMT)
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவிவருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது மட்டுமல்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பனிப்பொழிவால் குல்மார்க் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள ரெயில் சேவைகள் வரும் 11-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் அங்கு நிலவிவரும் பனிப்பொழிவை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காஷ்மீருக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X