என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானா தாசில்தார் எரித்துக்கொலை- தீக்காயங்கள் அடைந்த டிரைவரும் உயிரிழப்பு
Byமாலை மலர்5 Nov 2019 9:44 AM GMT (Updated: 5 Nov 2019 9:44 AM GMT)
தெலுங்கானாவில் தாசில்தார் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை காப்பாற்ற முயன்று தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிரைவர் இன்று உயிரிழந்தார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டம் உள்ளது. இங்குள்ள அப்துல்லா பூர்மெட் என்ற இடத்தில் பணிபுரிந்த தாசில்தார் விஜயா ரெட்டி, நேற்று அவரது அலுவலக அறையில் சுரேஷ் என்பவரால் எரித்து கொலை செய்யப்பட்டார்.
தனது நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுரேஷ் மதிய உணவு இடைவேளையில் விஜயா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷ் மீதும் தீ பற்றிக்கொண்டது. அவரும் 60 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயாவை காப்பாற்ற முயன்ற அவரது டிரைவர் குருநாதமும், குமாஸ்தாவும் கடுமையான தீக்காயங்களுடன் கஞ்சன்பாக் பகுதியில் உள்ள அப்பல்லோ டி.ஆர்.டி.ஓ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 80 சதவீதம் தீக்காயங்கள் அடைந்த டிரைவர் குருநாதம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தாசில்தாரின் குமாஸ்தா சந்திரையாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X