என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரி தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்துவதில் அரசு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
Byமாலை மலர்4 Nov 2019 12:56 AM GMT (Updated: 4 Nov 2019 12:56 AM GMT)
கல்லூரி தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு அரசின் விதிகளுக்கு ஏற்ப பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகளில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள் மூலம் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்வுக்கூடங்களில் குறைந்த சக்தி கொண்ட ஜாமர் கருவி பொருத்த மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து இந்த கருவிகளை தேர்வுக்கூடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு முன் அரசின் விதிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வும் தொடங்குவதற்கு ஜாமர் கருவியின் செயல்பாடு குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல சிறந்த ஜாமர் கருவி மாடலாக, ‘இ.சி-சி.ஆர்.ஜே-6பி5’ என்ற கருவியையும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகளில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள் மூலம் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்வுக்கூடங்களில் குறைந்த சக்தி கொண்ட ஜாமர் கருவி பொருத்த மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து இந்த கருவிகளை தேர்வுக்கூடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு முன் அரசின் விதிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வும் தொடங்குவதற்கு ஜாமர் கருவியின் செயல்பாடு குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல சிறந்த ஜாமர் கருவி மாடலாக, ‘இ.சி-சி.ஆர்.ஜே-6பி5’ என்ற கருவியையும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X