search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம்
    X
    பணம்

    குடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி

    குடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலால் பலியானார். அவருடைய ரூ.200 கோடி சொத்தில் பங்கு கேட்டு முதல் மனைவி மற்றும் 2-ம் மனைவியின் மகன்கள் குடும்பிபிடி சண்டையிட்டு வருகிறார்கள்.
    மும்பை:

    மும்பை நெப்பியன்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜவேரி. இவருக்கு 2 மனைவிகள். கடந்த 2013-ம் ஆண்டு ஜவேரி திடீரென காணாமல் போய் விட்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, காந்திவிலி பகுதியில் வைத்து அவரை கண்டுபிடித்தனர். அப்போது, அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். ஆனால் அவரது 2 மனைவிகளும், மகன்களும் அவரை கவனிக்காமல் கைவிட்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு சொந்தமான ரூ.200 கோடி சொத்தை பங்கு கேட்டு முதல் மனைவி மற்றும் 2-ம் மனைவியின் மகன்கள் குடும்பிபிடி சண்டையிட்டு வருகிறார்கள். அவர்கள் சொத்துக்கு உரிமை கோரி ஆசாத் மைதான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×