என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு, சேலத்துக்கு நவீன வசதிகளுடன் மெமு ரெயில்
Byமாலை மலர்5 Oct 2019 4:09 AM GMT (Updated: 5 Oct 2019 4:09 AM GMT)
எர்ணாகுளம், பாலக்காடு டவுணில் இருந்து ஈரோடு, சொர்ணூரில் இருந்து சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய ரெயிலுக்கு பதில் ‘மெமு’ ரெயில்கள் இந்த மாதம் முதல் இயக்கப்பட உள்ளன.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு டவுணில் இருந்து ஈரோடு, சொர்ணூரில் இருந்து சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய ரெயிலுக்கு பதில் ‘மெமு’ ரெயில்கள் இந்த மாதம் முதல் இயக்கப்பட உள்ளன.
இதனையடுத்து பாலக்காடு ரெயில் நிலையத்தில் ‘மெமு’ ரெயில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 என்ஜின்கள், 8 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்பிளே ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் ஜி.பி.எஸ். கருவி, கண்காணிப்பு கேமிரா, எல்.இ.டி. லைட், பயோ டாய்லெட் வசதிகள் உள்ளன.
இந்த ரெயிலில் 614 இருக்கைகள் உள்ளன. 1,788 பேர் நின்று பயணம் செய்யலாம். இது தவிர கார்டு, ஓட்டுனர் பெட்டிகள் முழுக்க முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங்க கூறும்போது, புதிய ரெயில் 35 சதவீதம் கூடுதல் ஆற்றில் கொண்டது. எதிர்வரும் நாட்களில் பாலக்காடு கோட்டத்துக்கு 3 ரெயில்கள் வருகிறது என்றார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு டவுணில் இருந்து ஈரோடு, சொர்ணூரில் இருந்து சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய ரெயிலுக்கு பதில் ‘மெமு’ ரெயில்கள் இந்த மாதம் முதல் இயக்கப்பட உள்ளன.
இதனையடுத்து பாலக்காடு ரெயில் நிலையத்தில் ‘மெமு’ ரெயில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 என்ஜின்கள், 8 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்பிளே ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் ஜி.பி.எஸ். கருவி, கண்காணிப்பு கேமிரா, எல்.இ.டி. லைட், பயோ டாய்லெட் வசதிகள் உள்ளன.
இந்த ரெயிலில் 614 இருக்கைகள் உள்ளன. 1,788 பேர் நின்று பயணம் செய்யலாம். இது தவிர கார்டு, ஓட்டுனர் பெட்டிகள் முழுக்க முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங்க கூறும்போது, புதிய ரெயில் 35 சதவீதம் கூடுதல் ஆற்றில் கொண்டது. எதிர்வரும் நாட்களில் பாலக்காடு கோட்டத்துக்கு 3 ரெயில்கள் வருகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X