என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார், உ.பி.யில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்
Byமாலை மலர்1 Oct 2019 7:49 AM GMT (Updated: 1 Oct 2019 7:49 AM GMT)
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.
“உ.பி. மற்றும் பீகாரில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும். மீட்புப்பணிகளில் அரசுடன் இணைந்து செயலாற்றவும், தேவையான உதவிகள் செய்யவும் ஐ.நா. தயாராக இருப்பதாக அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்” என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X