என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்டில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
Byமாலை மலர்30 Sep 2019 10:36 AM GMT (Updated: 30 Sep 2019 10:36 AM GMT)
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
தும்கா:
உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
அவ்வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் தும்கூர் மாவட்டம், அம்ஜர் கிராமத்தில் பெய்த தொடர் மழையால் நேற்று நள்ளிரவில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி மராண்டி, அவரது மனைவி லுக்கி, தாய் அம்தர் முர்மு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பிள்ளைகளும் வேறு அறையில் தூங்கியதால் உயிர்பிழைத்தனர். இதேபோல் அப்பகுதியில் மேலும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மழையால் அதிக பாதிப்புக்குள்ளான அந்த கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், போர்வைகள், தார்பாய்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
அவ்வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் தும்கூர் மாவட்டம், அம்ஜர் கிராமத்தில் பெய்த தொடர் மழையால் நேற்று நள்ளிரவில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி மராண்டி, அவரது மனைவி லுக்கி, தாய் அம்தர் முர்மு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பிள்ளைகளும் வேறு அறையில் தூங்கியதால் உயிர்பிழைத்தனர். இதேபோல் அப்பகுதியில் மேலும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மழையால் அதிக பாதிப்புக்குள்ளான அந்த கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், போர்வைகள், தார்பாய்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X